வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பூமிக்கு புறப்பட்டது. சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், ஸ்லாவோஸ், திபோர் கபு ஆகியோருடன் பூமிக்கு புறப்பட்டது டிராகன் விண்கலம். முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரிவதில் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. சிறிய தாமதம் ஏற்பட்ட நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. டிராகன் விண்கலத்தில் 22.5 மணி நேரம் பயணித்து நாளை மாலை 3 மணிக்கு பூமிக்கு திரும்புகின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வை முடித்து நாளை பூமிக்கு திரும்புகின்றனர்.
டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. கலிஃபோர்னியா கடலில் டிராகன் விண்கலம் விழும் வகையில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. முன்னதாக அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். 31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு உதவியாக சுபான்ஷவின் பயணம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வை முடித்துவிட்டு பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!! appeared first on Dinakaran.