சென்னை: சென்னை மாநகரில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ள 57 புதிய வாகனங்களை, மாநகராட்சி பயன்பாட்டுக்கு மேயர் ஆர்.பிரியா அனுப்பி வைத்தார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியும் நடைபெற்று வருகிறது. மார்ச் 3-ம் தேதி வரை 51,214 டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன.