சிஎஸ்கே நேற்று முதல் முறையாக சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்று நடப்பு ஐபிஎல் தொடரில் 7-வது தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘பேபி ஏபிடி’ என்று வந்த புதிதில் வர்ணிக்கப்பட்ட டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். இதில் 4 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும்.
பிரேவிஸ் அட்டகாசமாக ஆடிக் கொண்டிருக்கையில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தை கவர் திசையில் தூக்கி அடிக்க அங்கு கமிந்து மெண்டிஸ் அட்டகாசமான, நம்ப முடியாத, பிரமிப்பூட்டும் கேட்சை எடுத்தார். இதனால் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் என்றிருந்த சென்னை 180 ரன்களைக் குவிக்க முடியாமல் போனதும் தோல்விக்குக் காரணமானது.