ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியாக இது அமைந்தது.
அந்த அணி இதற்கு முன்னர் சொந்த மைதானத்தில் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த ஆட்டங்களில் முதலில் பேட் செய்த போதெல்லாம் பெங்களூரு அணி 170 ரன்களை கூட எட்டியது இல்லை. ஆடுகளம் மந்தமாக இருப்பதாக பேட்டிங் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் குற்றம் சாட்டியிருந்தார்.