Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: சிரியா – இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம்: இனக் குழுக்கள் ஆயுதங்களை கீழே போட அமெரிக்கா கோரிக்கை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran World

சிரியா – இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம்: இனக் குழுக்கள் ஆயுதங்களை கீழே போட அமெரிக்கா கோரிக்கை

EDITOR

சிரியா: சிரியாவில் ட்ரூஸ் மதத்தினர் அதிகம் வாழும் சுவைடாவில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் – சிரியா இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியா நாட்டின் ஸ்விடியா மாகாணத்தில் வாழும் சியா பிரிவை சேர்ந்த ட்ரூஸ் இன மக்கள், இஸ்ரேலிலும் சிறுபான்மையினராக உள்ளனர். சிரியாவில் ட்ரூஸ் இனத்தினருக்கும், சன்னி பிரிவை சேர்ந்த பெடோயின் பழகுடியினருக்கும் மோதல் வெடித்த நிலையில், அதில் சிரியா ராணுவம் தலையிட்டது. அங்கு நடந்த மோதல்களில் பெண்கள், குழந்தைகள் என 321 பேர் கொல்லப்பட்ட நிலையில், பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே தங்கள் இனத்தினருக்கு உதவ இஸ்ரேலில் இருந்து ட்ரூஸ் இனமக்கள் எல்லை தாண்டி சென்றதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஸ்விடியா மாகாணத்தில் இருந்து சிறிய ராணுவம் பின்வாங்க வேண்டும் என்று கூறிய இஸ்ரேல், சிரியா பாதுகாப்பு அமைச்சகத்தை தாக்கியது. இந்த சூழலில் ஸ்விடியாவில் இருந்து 20,000 பேர் இடம் பெயர்ந்த நிலையில், சிரியா – இஸ்ரேல் இடையிலான மோதலால் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளின் ஆதரவுடன் சிரியா – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்தது. சிரியாவுக்கான அமெரிக்க தூதர் டாம் பராக், தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், ட்ரூஸ் மற்றும் பெடோயின் இன மக்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு மற்ற பழங்குடியின மக்களுடன் சேர்ந்து சிரியாவில் ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும் என டாம் பராக் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post சிரியா – இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம்: இனக் குழுக்கள் ஆயுதங்களை கீழே போட அமெரிக்கா கோரிக்கை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
  • நோய் பாதித்த தெரு நாய்களை கருணை கொலை செய்ய அரசு அனுமதிக்க கோரிக்கை
  • அதிமுக Vs பாஜக: அடித்து ஆடும் இபிஎஸ் – ஏமாறுவது, ஏமாற்றுவது யார்?
  • தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் முடித்துவைப்பு
  • ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
  • 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 குற்றவாளிகளும் விடுதலை

You Might Also Like

ரஷ்யாவில் 3 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

July 20, 2025

சைபர் குற்ற மோசடியில் ஈடுபட்ட 1000 பேர் கைது: கம்போடிய போலீஸ் அதிரடி

July 17, 2025

பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

July 16, 2025

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?