சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காக மக்களின் நலன் சமரசம் செய்யப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி விவகாரத்தில் எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகையுடைய 40 நகரங்களின் பட்டியலில் மதுரை 40-வதாக கடைசி இடத்தில் உள்ளது.