மதுரை: சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ்கபூர் மீதான வழக்குகளை திரும்ப பெறலாம் என உள்துறை அமைச்சகத்துக்கு பொன். மாணிக்கவேல் மின்னஞ்சல் அனுப்பினார் என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். இவர் மீது பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைக்க உதவியதாக அதே பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காதர்பாட்சா குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் காதர்பாட்சா வழக்கு தொடர்ந்தார்.