கோவை: நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இந்திய பம்ப்செட் தொழில், சமீப காலமாக சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படும் கழிவுநீர் வடிகால் மோட்டார் பம்ப்செட்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு உதவ வேண்டும் எனவும், தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மோட்டார் பம்ப்செட் உற்பத்தி தொழிலில் உலகளவில் இந்தியா மிகச் சிறந்து விளங்குகிறது.
தமிழகம் (கோவை), குஜராத் போன்ற மாநிலங்களில் வீடு, விவசாயம், தொழில் நிறுவனங்கள், கல்வி குழுமங்கள், மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் பல வகையான மோட்டார் பம்ப்செட் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.