புதுடெல்லி: கொள்கை சீர்திருத்தம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்கியது ஆகியவற்றால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1,50,590 கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் உற்பத்தியை விட 18 சதவீதம் உயர்வு. கடந்த 2019-20-ம் ஆண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் உயர்வு.