சிஎம்டிஏ சார்பில் ரூ.53 கோடியில் நாட்டிலேயே முதல்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, கடை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
சென்னை கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை சார்ந்து வாழ்கின்றனர். இதை கருத்தில்கொண்டு, கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, மீன் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில், வண்ண மீன் வர்த்தகத்தை பெரிய அளவில் மேம்படுத்த தமிழகத்தில் முதன்முறையாக உலகத் தரத்திலான பிரத்தியேக வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என 2021-22 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.