திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் பாரதியார் நினைவு இல்லம் எதிரே கழிவுநீர் குழாய் உடைந்ததால் அந்த வழியே பார்த்தசாரதி கோயிலுக்கு செல்வோரும், அப்பகுதியில் வசிப்போரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் சென்னை குடிநீர் வாரியத்திடம் புகார் அளித்தனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்தபோது அங்குள்ள பாரதியார் நினைவு இல்லம் எதிரே சாலையில் 8 அடி ஆழத்தில் செல்லும் கழிவுநீர் குழாய் உடைந்திருப்பது தெரியவந்தது. பொக்லைன் தோண்டி பார்த்தபோது 6 அடி நீளத்துக்கு கழிவுநீர் குழாய் உடைந்து, கழிவுநீர் வெளியேறுவது கண்டறிப்பட்டது.