சென்னை: சாலையோர வியாபாரிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நகர விற்பனைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலம் பி,ஹேமகணேஷ், வடபழனி பி.மதன்குமார், தி.நகர் செல்லம்மாள், மீனாட்சி, பழைய பல்லாவரம் சேகர், தேனாம்பேட்டை எஸ்.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னையில் சாலையோரம் மற்றும் தெருவோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி மாநகராட்சிக்கு முறையாக விண்ணப்பித்தும் எங்களது மனுக்கள் பரிசீலி்க்கப்படவில்லை. எனவே, எங்களது அன்றாட பிழைப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும் சாலையோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனர்.