சென்னை: “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீரை சீராக விநியோகிக்க சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை சுற்றுச்சாலை குழாய் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்” என்று பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
பேரவையில் இன்று (மார்ச் 19) கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் துணைக் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசுகையில், “சென்னையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தினமும் 900 மில்லியன் லிட்டர்தான் குடிநீர் வழங்கப்பட்டது. இப்போது தினமும் 1100 மில்லியன் லிட்டர் வழங்கப்படுகிறது.