சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மைப் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளதை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், துாய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதிமுதல் தொடர்ந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவால், நள்ளிரவில் இவர்கள் கைது செய்து, குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து செப். 4-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், திடீரென திரண்ட 300-க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்களை மீண்டும் குண்டுக்கட்டாக போலீஸ் கைது செய்தது. இந்த திடீர் போராட்டத்தை அடுத்து துாய்மைப் பணியாளர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.