பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை, இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை அரங்கேற்றம் செய்தார். உலகின் சிறந்த ராயல் பில் ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இந்த சிம்பொனியை அரங்கேற்றினார்.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 நிமிடம் சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது. அவரின் இசைக் குறிப்புகளை 80 இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.