மாநகராட்சி சார்பில், ரூ.50 லட்சத்தில் வேளச்சேரி மற்றும் கே.கே.நகரில் ஆன்லென் டெலிவரி ஊழியர் ஓய்வுக் கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக, ஆன்லைனில் உணவு, காய்கறி, ஆடைகள், வீட்டு உபயோக பொருட்களை பொதுமக்கள் ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இந்த ஆர்டர்களை பெற்று, பொருட்களை டெலிவரி செய்யும் பணியாளர்களும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக, உணவு டெலிவரி சேவை அதிகரித்துள்ளது. இதற்காக, டெலிவரி செய்யும் ஊழியர்கள் முக்கிய உணவகங்கள் முன்பு நீண்ட நேரம் காத்திருத்து, தயாரான உணவை பெற்று, டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.