சென்னை: சென்னையில் ஸ்கூட்டி ஓட்டி முதியவர் மீது மோதி படுகாயம் அடையச் செய்த சிறுவன், அவனது தாய் கைது செய்யப்பட்டனர். 16 வயது சிறுவன் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்று முதியவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காட்சி வெளியானது. படுகாயங்களுடன் முதியவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். 16 வயது சிறுவனுக்கு ஸ்கூட்டியை ஓட்டக் கொடுத்த அவனது தாயையும் போலீசார் கைது செய்தனர்.
The post சென்னையில் ஸ்கூட்டி ஓட்டி முதியவர் மீது மோதி படுகாயம்: சிறுவன், அவனது தாய் கைது appeared first on Dinakaran.