
ஜம்மு: 'ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல. ஒரு சிலர் மட்டுமே அமைதியைக் கெடுக்கிறார்கள்' என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்த முதல்வர் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த மதமும் இவ்வளவு கொடூரமாக அப்பாவிகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடரும். ஆனால் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதியோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களோ அல்ல. இங்கு எப்போதும் அமைதியையும், சகோதரத்துவத்தையும் சீரழித்து வருபவர்கள் ஒரு சிலர் மட்டுமே.

