கரூர்: அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.230 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.2,000 கோடி) மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 60,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதித்திருப்பதால், அமெரிக்க வாடிக்கையாளர்கள் உற்பத்தியாளர்களுக்கு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிடுகின்றனர்.