ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தில் இரண்டு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கிரிதிஹின் கோத்தம்பா சவுக்கில் உள்ள ஒரு குறுகலான தெரு வழியாக ஹோலி ஊர்லம் சென்ற போது இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டது. இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. சுமார் ஒரு மணிநேரம் இந்தக் குழப்பம் நீடித்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று நடவடிக்கையில் ஈடுபட்டனர்.