தீபாவளி தினத்தன்று ஜிஎஸ்டி வரி விதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என கோவையை சேர்ந்த தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜஷ் லுந்த்: சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் வரி குறைப்பு, தானியங்கி முறையில் ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வணிகத்தை எளிமையாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பிரதமரின் அறிவிப்புக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.