புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 45 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் பிஎஸ் செகண்ட்ரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் 45 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருதினை வழங்க உள்ளார்.