புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
புலவாயோ நகரில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இங்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 130 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவன் கான்வே 153, ஹென்றி நிக்கோல்ஸ் 150, ரச்சின் ரவீந்திரா 165, வில் யங் 74 ரன்கள் விளாசினர்.