பெங்களூரு: இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தலுக்கு மாற்று வீரராக நியூஸிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிம் செய்ஃபெர்ட்டை ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி. இது குறித்து அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நாளை (மே 23) நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான லீக் ஆட்டத்தில் ஜேக்கப் பெத்தல் விளையாடுவார். அதன் பின்னர் அவர் இங்கிலாந்து அணியுடன் இணைய உள்ளார். வரும் 29-ம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் இங்கிலாந்து விளையாட உள்ளது. அந்த தொடருக்கான அணியில் பெத்தல் இடம்பெற்றுள்ளார்.