கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸ்தி
ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிங்ஸ்டனில் நேற்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரண்டன் கிங் 36 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார். ஆந்த்ரே ரஸ்ஸல் 15 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்களையும், கிளென் மேக்ஸ்வெல், நேதன் எலிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.