கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கோவை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 38 பந்துகளில், 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாருக்கான் 25, ஆந்த்ரே சித்தார்த் 25 ரன்கள் சேர்த்தனர்.
திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர், அஸ்வின், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 150 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திண்டுக்கல் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஷிவம் சிங் 50 பந்துகளில், 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார்.