சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி ஒருவரை தற்போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சட்டம்- ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபிக்கள் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கடராமன், வினித்தேவ் வான்கடே என அடுத்தடுத்து பட்டியலி்ல் உள்ளனர்.