‘லவ் டுடே’ மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் கவனிக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் நடித்து, அடுத்து வரும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித் திருக்கும் இந்தப் படத்தை, ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். வரும் 21-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி இயக்குநரிடம் பேசினோம்.
‘டிராகன்’ யார்? – பொதுவா காலேஜ்ல சேர்ந்ததுமே யாராவது ஒரு சீனியர் பற்றி பரபரப்பா எல்லோருமே பேசிட்டு இருப்பாங்க. அவனுக்கு ஃபிரெண்டா இருந்தா கவனிக்கப்படுவோம்னு எல்லோரும் அவன்கூட சுத்துவாங்க. ஆனா, காலேஜை விட்டுட்டு வெளிய வந்தபிறகு அந்த கேரக்டரை யாருமே கண்டுக்க மாட்டாங்க. அவன் வாழ்க்கை என்னாச்சுன்னு கூட யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு சீனியரின் கதைதான் இது. அந்த மாதிரி கேரக்டருக்கு பட்டப் பெயர் இருக்கும். அதுதான் டிராகன்.