டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றது. சமீபத்தில் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. இதில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.