புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 உதவித் தொகைக்காக காத்திருக்கிறார்கள் என்று பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அதிஷி சாடியுள்ளார்.
டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மார்ச் 8-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.