புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று (பிப்.5) காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 8 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடும் குளிர் காரணமாக வாக்குப்பதிவு தொடங்கியபோது மந்தநிலை நிலவினாலும் பின்னர் படிப்படியாக வாக்குப்பதிவு விறுவிறுப்பானது.