புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி கடந்த வியாழக்கிழமை டெல்லிக்கு வந்தார். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் இந்தியாவுக்கு முதல் முறையாக வந்துள்ளார்.
தனது 7 நாள் இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாளில் அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு வர்த்தகம், மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.