புதுடெல்லி: டெல்லி மக்களின் பல்வேறு துறைகளின் குறைகளைத் தீர்க்க ’டெல்லி மித்ரா’ எனும் செயலியை செயல்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக அம்மாநில முதல்வர் ரேகா குப்தா அரசு அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தலைநகரான டெல்லி மக்கள் பல்வேறு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.