
கொல்கத்தா: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுக்கப்பட்டுள்ளார்.
அவர், இந்தியா ‘ஏ’ அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

