தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவ் 45 நாடுகளுக்கு பயணித்ததும், அதில் துபாய்க்கு மட்டும் 27 முறை சென்று வந்ததும் வருவாய் புலனாய்வு இயக்குநரக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32) தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த 'வாகா' திரைப்படத்தில் ந‌டித்தார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் உடையில் மறைத்து எடுத்து வந்த 14.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.