ஊட்டி: மலைப்பகுதியில் பயிற்சி பெறுவது தடகள வீரர்களுக்கு களத்தில் பயனளிக்கும் என இந்திய தடகள வீராங்கனை மற்றும் தெற்காசிய சாம்பியன் ஷர்வானி சாங்லே தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கில் கிரசண்ட் பள்ளி விளையாட்டு விழா இன்று நடந்தது. போட்டிகளை பள்ளி தாளாளர் உமர் பரூக், நகராட்சி துணை தலைவர் ஜே.ரவிகுமார் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பாரா ஒலிம்பிக் தடகள வீரர் திலிப் காவிட், இந்திய தடகள வீராங்கனை மற்றும் தெற்காசிய தடகள சாம்பியன் ஷர்வானி சாங்லே மற்றும் பயிற்சியாளர் வைஜ்நாத் காலே கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.