‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை பார்த்துவிட்டு தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு தனது திரையுலக நண்பர்களுக்கு படத்தினை திரையிட்டு காட்டி வருகிறார் தனுஷ். முதலாவதாக எஸ்.ஜே.சூர்யா பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.