புதுடெல்லி: மகளிர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடக கணக்குகளை, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 6 சாதனை பெண்கள் நேற்று இயக்கினர்.
கடந்த 23-ம் தேதி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சர்வதேச மகளிர் தினத்தில் என்னுடைய சமூக ஊடக கணக்குகளை பெண்களுக்காக அர்ப்பணிப்பேன். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் தங்களுடைய அனுபவங்களை எனது சமூக ஊடக கணக்குகள் மூலம் மக்களோடு பகிர்ந்து கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.