விருதுநகர்: “மத்திய ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல. தமிழக மக்கள் இத்தகைய அரசியலை புரிந்துகொண்டு தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று (மார்ச் 12) அவர் அளித்த பேட்டியில் கூறியது: “தமிழகத்தில் உள்ள கல்வி முறையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சிதான். காரணம் பிஞ்சு மனதில் தோல்வி என்ற பாதிப்பும், கல்வியை பாதியில் விட்டுவிடக் கூடாது என்பதற்காக இக்கொள்கை பின்பற்றப்படுகிறது. மத்திய அரசு கொண்டுவரும் கல்விக் கொள்கையில் 3 வயதில் பள்ளியில் குழந்தையை சேர்க்க வேண்டும்.