சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், கோடை காலத்தை போன்று தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலைவழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.