
சென்னை: குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 4 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இளைஞர்கள் பலரும் அரசுப் பணியில் சேர முயன்று வருவதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது.

