ஆந்திராவில் மா கொள்முதல் செய்ய மானியம் வழங்குவதால், வெளிமாநிலங்களில் இருந்து மாங்காய்கள் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுவை மிகுந்த ரகங்களான அல்போன்ஸா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். நிகழாண்டில் பெய்த மழையால் இரட்டிப்பு மகசூல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நோய் தாக்கம், விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.