உதகை: “தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும், முடக்க வேண்டும் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” என்று நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.
நீலகிரி மாவட்ட திமுக குழு கூட்டம் உதகையில் இன்று (மார்ச் 5) நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசியது: “எம்ஜிஆருக்கு பிறகு பெண்கள் மத்தியில் ஆதரவு பெற்ற முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.