சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) அன்று ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏர்டெல் டெலிகாம் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை தமிழகம் முழுவதும் பரவலாக ஏர்டெல் பயனர்கள் மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். இதோடு மொபைல் நெட்வொர்க் மற்றும் மொபைல் டேட்டாவும் பயன்படுத்த முடியாமல் சில பயனர்கள் தவித்தனர்.