சென்னை: தமிழ்நாடு அரசின் அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை என விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தாய்ப் பாலுடன் கலந்து ஊட்டப்பெற்றது தாய்மொழி என்பதால், தாய்மொழியாம் தமிழ் மொழியில் படிக்க வேண்டுமென்றும், தாய்மொழியிற் சிறந்த தெய்வமுமில்லை என்றும் சான்றோர்கள் கூறுகின்றனர். மாணவ, மாணவியரின் சிந்தனையும், கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன என்பதால் தாய்மொழியாம் தமிழ்மொழி வழிக்கல்வி அவசியம் என்பதை அனைவரும் வலியுத்துகின்றனர்.