கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக எழுந்திருக்கும் புகார்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. நாட்டையே அதிரவைத்திருக்கும் இந்தப் புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், நூற்றுக்கணக்கான பெண்கள் / சிறுமிகளின் சடலங்களைப் புதைத்ததாகப் பகிரங்கமாகக் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.