நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தவறான விவசாய முறைகளால் மதிப்புமிக்க பல டன் மேல் மண் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மண்ணுக்கான முக்கியதுவம் புறந்தள்ளப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தவறான விவசாய முறைகளால் அதீத மழை, காற்று, பருவ மழை காலங்களில் மதிப்புமிக்க மேல் மண்ணை இழந்து கொண்டிருக்கிறது நீலகிரி மாவட்டம். இந்த மண் நீர்நிலைகளில் படிந்து அவற்றின் கொள்ளளவை குறைத்து விடுவதுடன், மண் மதிப்பற்றதாகி விடுகிறது.