திருச்சி: விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும், தொண்டர்கள் மரத்தில் ஏறி நிற்க கூடாது என்பன உள்ளிட்ட 23 நிபந்தனைகளுடன் திருச்சியில் தவெக தலைவர் பிரச்சாரம் செய்வதற்கு மாநகர காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு செப்.13-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி அக்கட்சியின் நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல்துறையிடம் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்த போலீஸார் 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.