மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சென்னைக்கு பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துக்காக தாம்பரம் -மேல்மருவத்தூர் இடையே கூடுதல் ரயில்கள் இயக்கவும் அனைத்து ரயில்களையும் நிறுத்தி இயக்கவும் காஞ்சிபுரம் எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மதுராந்தகம் நகரை சுற்றி உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள், பணிக்கு செல்வோர், பள்ளி, கல்வி நிறுவனங்கள் செல்வது உட்பட பல்வேறு தேவைகளுக்காக, நகரபகுதியில் இருந்து ரயில் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.