மதுரை: “திமுக அமைச்சர்களால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது,” என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அமைச்சர் பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தியும், ஆபாசமாக பேசியதையும் கண்டித்து, அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒத்தக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், அமைப்பு செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். அப்போது, வி.வி.ராஜன் செல்லப்பா பேசியது: “அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை கேலியாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.